Jesus Power
Ministries

Faith • Truth • Hope

Faith Digest

Discover inspiring Bible messages, practical Christian teachings, devotional thoughts and faith-building reflections for everyday life.

தேவ சமுகத்தில் ஜாக்கிரதை!
27 Aug

தேவ சமுகத்தில் ஜாக்கிரதை!

«“உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்...” — எபிரெயர் 3:15»

இன்றைய வேத பகுதி: எபிரெயர் 3:1–19 தேவ சமுகம் — பெரிய ஆசீர்வாதம்: மின்சாரம் நம்முடைய வீடுகளுக்கு வெளிச்சத்தைக் கொண்டுவருகிறது. நல்ல காற்றோட்ட வசதியை ஏற்படுத்துகிறது. பலவிதமான இயந்திரங்களை இயக்க உதவுகிறது. நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு மின்சாரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் அதே மின்சாரத்தைத் தகுந்த எச்சரிக்கையின்றி கையாளும்போது அது மிகுந்த ஆபத்தையும் ஏற்படுத்தக்கூடும். ஆசீர்வாதமான ஒன்றை சரியான முறையில் பயன்படுத்...

Read
போகுமிடமெல்லாம்...
26 Aug

போகுமிடமெல்லாம்...

«“சாந்த குணமுள்ளவர்கள் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்...” — சங்கீதம் 37:11»

இன்றைய வேத பகுதி: கலாத்தியர் 5:14–26 பிரச்சினை எங்கே இருக்கிறது? மூட்டைப் பூச்சிகளின் தொல்லை தாங்காமல் ஒரு மனிதன், ஒவ்வொரு வாடகை வீடாக மூட்டை முடிச்சுகளுடன் குடிபெயர்ந்து கொண்டேயிருந்தான். ஆனால் அவன் எங்கு சென்றாலும் சில நாட்களுக்குள் மீண்டும் மூட்டைப் பூச்சித் தொல்லை ஆரம்பித்துவிடும். “வாடகை வீடுகள் எல்லாமே மூட்டைப் பூச்சிகளால் நிறைந்திருக்கின்றன!” என்று அவன் சலித்துக்கொண்டான். ஆனால் உண்மையான காரணம் அவனுக்குத் தெரிய...

Read
தேவன் வரைந்த வட்டம்
25 Aug

தேவன் வரைந்த வட்டம்

«“போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.” — 1 தீமோத்தேயு 6:6»

இன்றைய வேதப்பகுதி:1 தீமோத்தேயு 6:1–17 ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கும் தேவன் ஒரு குறிப்பிட்ட அளவையும், பாதையையும் வைத்திருக்கிறார். எல்லோருக்கும் ஒரே மாதிரியான வட்டத்தை அவர் வரைவதில்லை. ஒருவருக்குக் கொடுக்கப்படும் வாய்ப்புகள், மற்றொருவருக்குக் கொடுக்கப்படாமல் இருக்கலாம். ஒருவருடைய பாதை உயரமானதாகத் தோன்றலாம்; இன்னொருவருடைய பாதை அமைதியானதாக இருக்கலாம். ஆனால் வட்டம் எவ்வளவு பெரியது என்பது முக்கியமல்ல; அந்த வட்டத்திற்குள் தே...

Read
மாராவை மதுரமாக்கும் மரம்
24 Aug

மாராவை மதுரமாக்கும் மரம்

«“கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்.” — யாத்திராகமம் 15:25»

இன்றைய வேதப்பகுதி:யாத்திராகமம் 15:22–27 நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான பிரச்சினைகளைச் சந்திக்கிறோம். பலவிதமான சோதனையான சூழ்நிலைகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. இவை அனைத்தும் இந்தப் பூமியில் வாழும் ஒவ்வொருவருக்கும் சகஜமானவை. ஆனால், நம்முடைய உண்மையான பிரச்சினை எது தெரியுமா? பிரச்சினை இருப்பது மட்டும் பிரச்சினையல்ல; அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வழியை அறியாமல் இருப்பதுதான் பெரிய பிரச்சினை. நோய் ஒரு பிரச்சினை...

Read
சமாதானமும் சந்தோஷமும்
22 Aug

சமாதானமும் சந்தோஷமும்

«“இலக்கை நோக்கித் தொடருகிறேன்.” — பிலிப்பியர் 3:14»

இன்றைய வேதப்பகுதி: பிலிப்பியர் 3:1–15 சமாதானம் என்பது நம்முடைய ஆசையாக இருக்க வேண்டும். சந்தோஷம் என்பது நம்முடைய எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும். ஆனால், அவைகளே நம்முடைய வாழ்க்கையின் இலக்குகளாக இருக்கக் கூடாது. அவற்றையே இலக்குகளாகக் கொண்டு வாழும்போது, நாளடைவில் சமாதானக் குறைவும் சந்தோஷக் குறைவும் ஏற்படலாம். சமாதானமும் சந்தோஷமும், நாம் ஒரு உயர்ந்த இலக்கை நோக்கிப் பயணிக்கும்போது ஏற்படும் பிரதிபலன்களாகும். எனவே, ஒரு பரிசுத...

Read
உங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்..
21 Aug

உங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்..

நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன்... ஏசாயா 6:5

இன்றைய வேத பகுதி:ஏசாயா.6:1-8 ​​​​​நம்மை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதோ, நம்மைப் பிறர் மதிக்கவில்லை என்பதோ, பெரிய விஷயங்கள் அல்ல. முதலாவது நாம் நம்மை ஏற்றுக் கொண்டோமா என்பதே முக்கியம். முதலாவது நாம் நம்மை மதிக்கின்றோமா என்பதே முக்கியம். சிலர் தங்களைத் தாங்களே மட்டமாகவும், மதிப்பற்ற விதத்திலும் பார்த்து சலித்துக் கொள்வார்கள். ஆனால், மற்றவர்கள் தங்களை உயர்வாகவும், மதிப்பிற்குரியவர்களாகவும் பார்க்க வேண்டும் என்று...

Read